Thursday, April 9, 2009

இங்கே நின்றுவிடுதல்.

இங்கேயே நின்று விடுகிறேனே ?

நடுநிசியில்
அடர்ந்த காட்டுக்குள்
விரட்டப்பட்டவனின் மனமென
பயம் ஆட்கொள்கிறது.

தோற்றுப் போன
மாவீரன் ஒருவனின்
கொடுஞ்சினமென பாய்கிறது
என்மீதான கோபம் .

இந்த கணம்
மரணமடைபவனின் இதயத்துடிப்பென
மிரள்கிறது
நம்பிக்கை தொலைத்து.

கோடையில்
சிறு பொழுதேனும்
பொழியும் மழையென
என்மீதான கருணை .

அடர்ந்து பறக்கும்
பறவைகளின்
சிறகு விசிறிவிட்ட
மென் காற்றென
திளைக்கிறது
மனது .

மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.

7 comments:

venkatesh said...

எங்கெங்கோ சுற்றி வருகிறது உங்கள் கற்பனை. வாழ்த்துக்கள். பலமுறை படித்த பின்பு உள்ள கருது புரிகிறது. காட்டுக்குள் வந்ததில் மிகவும் வருத்தமா?

- venkatesh

மண்குதிரை said...

//மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.//

ரசித்தேன்.

பிரவின்ஸ்கா said...

@ மண்குதிரை
வருகைக்கு மிக்க நன்றி .

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway...please continue your work...!

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி..

anujanya said...

வாவ், ரொம்ப நல்லா இருக்கு.

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

@அனுஜன்யா
தங்களின் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி