இங்கேயே நின்று விடுகிறேனே ?
நடுநிசியில்
அடர்ந்த காட்டுக்குள்
விரட்டப்பட்டவனின் மனமென
பயம் ஆட்கொள்கிறது.
தோற்றுப் போன
மாவீரன் ஒருவனின்
கொடுஞ்சினமென பாய்கிறது
என்மீதான கோபம் .
இந்த கணம்
மரணமடைபவனின் இதயத்துடிப்பென
மிரள்கிறது
நம்பிக்கை தொலைத்து.
கோடையில்
சிறு பொழுதேனும்
பொழியும் மழையென
என்மீதான கருணை .
அடர்ந்து பறக்கும்
பறவைகளின்
சிறகு விசிறிவிட்ட
மென் காற்றென
திளைக்கிறது
மனது .
மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago


7 comments:
எங்கெங்கோ சுற்றி வருகிறது உங்கள் கற்பனை. வாழ்த்துக்கள். பலமுறை படித்த பின்பு உள்ள கருது புரிகிறது. காட்டுக்குள் வந்ததில் மிகவும் வருத்தமா?
- venkatesh
//மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.//
ரசித்தேன்.
@ மண்குதிரை
வருகைக்கு மிக்க நன்றி .
Greetings from Norway...please continue your work...!
மிக்க நன்றி..
வாவ், ரொம்ப நல்லா இருக்கு.
அனுஜன்யா
@அனுஜன்யா
தங்களின் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Post a Comment