அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
தாய் இருந்தும்
தந்தை இருந்தும்
உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .
அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
2 comments:
ஏதோ வலி சொல்கிறது கவிதை; எனக்கு ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தைக் கண் முன் நிறுத்துகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
இந்த கவிதை நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதியது .
உங்கள் கண் முன் நின்றது சரிதான்.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பம் தான்
இந்தக் கவிதையை எழுதவைத்து.
அப்போது யுகமாயினி இதழில் வெளிவந்தது .
மிக்க நன்றி .
Post a Comment