சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .
சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .
கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .
சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்
வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .
நன்றி - உயிரோசை
எழுத்தாளன் சும்மா முந்திரிக்கொட்டை பொறுக்குபவன்தான் - நேர்காணல்: கண்மணி
குணசேகரன்
-
கண்மணி குணசேகரன், தமிழின் தனித்துவமான நடுநாட்டு கதைசொல்லி. இவர் எழுதிய
‘அஞ்சலை’ தமிழ் கிளாசிக் நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ‘நடுநாட்டுச்
சொல்லக...
6 days ago

