Thursday, April 30, 2009

வருகை..

வழக்கமாக நீ
கடந்து செல்லும்
நதிக்கரை பாதையோரம்
காத்துக் கிடக்கிறேன்
மெய்ப்படவில்லை
உனது வருகை

வாசல் கதவு திறக்கப்படாத
பூக்கள் மொட்டவிழ்கிற
அதிகாலைப் பொழுதொன்றில்
வருகை புரிகிறாய்
என் அறை சாளரம்
வழி உட்புகுந்த
வண்ணத்துப் பூச்சி.

No comments: