கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று
அதிகாலையில்
வாசல் செம்பருத்தி பூவின்
முகம் முழுவதும்
துக்கம்
துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்
பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று
இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
1 month ago


No comments:
Post a Comment