Wednesday, April 1, 2009

இறுதித் துளியை

கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று
அதிகாலையில்

வாசல் செம்பருத்தி பூவின்
முகம் முழுவதும்
துக்கம்

துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்

பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று

இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை

No comments: