Friday, May 31, 2013

நடுச்சாமத் தீராப்பசி

கனன்று மினுமினுக்கும்  கண்களுடன்
புலியின் தோரணையுடன்
பளபளக்கும்   தரையில்
மகரந்தங்கள் படிவதையொத்த நடையுடன்
பால்தேடி அலைகின்றன
பூனைகள் .





Sunday, May 19, 2013

-நகுலன் (வாக்குமூலம்)


என் "எழுத்துக்கள்" தான் என்னை ஒரு நிலையில் வைத்திருக்கின்றன.
ஒவ்வருவரைப் பார்கையில், ஒவ்வொரு அனுபவம் என்னை பாதிக்கையில் நான் அவர்களின் அவைகளின் நிழல்கள் ஆகி விடுகிறேன் .நான் 'ஏதோ ஒன்றின்' நிழலாக இயங்கி வருவதால் தான் என் ஜென்மமே சாபல்யமடைகிறது என்று இடைவிடாமல் என்
உள்ளில் ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது.எனக்கே நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியவில்லை.அனால் வேறொன்றின் மூலம் தான் நான் இயங்குகிறேன் என்ற ஒரு உணர்வும் கூடவே என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ பார்த்தாகி விட்டது எனக்குத் தூக்கம் வருகிறது.இந்த உறக்கத்தில் இனி கனவுகள் இல்லை. இந்த உறக்கம் கலைவதையும் நான் விரும்பவில்லை.

-நகுலன் (வாக்குமூலம்)  

Tuesday, May 14, 2013

நிச்சயம் வெளியேறி விடுவேன்

பக்கம் எண் 25 - 27 ஒட்டியிருந்தது 

புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணன் ஒருவனின் 
கத்தரிக்கோலால்   
 
அவனின் 
புத்திகூர்மையோடும் 
உற்சாகத்தோடும்
பரவசத்தொடும் 
கனிவோடும்
நம்பிக்கையோடும்
கத்தரித்தேன்

சிவப்புப் புள்ளியோ 
அதன் வாசனையோ
இல்லவே இல்லை  

"நிச்சயம் வெளியேறி விடுவேன் " என்கிறார் 
சுவர்களுக்குள் 
சுகுமாரன்.      

Monday, May 6, 2013

நிபந்தனை

உண்ண உணவு
உடுக்க உடை
உறங்க இடம்

கிடைக்கிறது

கண்கள் பார்க்கக்கூடாது
காதுகள் கேட்கக்கூடாது
வாய் பேசக்கூடாது
கை எழுதக்கூடாது

என்ற நிபந்தனையோடு



ஆதல்

காது கிடையாது
கேட்க முடியும்

கண்கள் கிடையாது
பார்க்க முடியும்

வாய் கிடையாது
பேச முடியும்

கைகள் கிடையாது
கொடுக்க முடியும்

வேண்டுதல் உண்டு
வழிபாடு  கிடையாது

நானாக
நீயாக
அவனாக
அவளாக
அதுவாக ஆனது
நடுச்சாமத்தில் செய்த கடவுள்