பிணங்களின் குவியலைத் தாண்டி
கண்ணீரோடு வீட்டுக்கான
பாதையொன்றில் விரைகிறது
சிதைந்தது போக
மீந்து போன ஒற்றைக் கையை
கவ்விக்கொண்டு
அவன் வளர்த்த நாயொன்று
வெளியெங்கும் விரவிக்கிடக்கிறது
கசப்புத்தன்மையும்
வெறுப்புக்களும்
சிந்திய கண்ணீர்த்துளிகளும்
உரைந்த ரத்தமும்
மின்னிக் கொண்டிருக்கின்றன
இரவுகளில்.
கடலில் சேர்க்கிறது
கடலை நம்பி வாழ்த்த
அவர்களின் பாதை.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
4 weeks ago
No comments:
Post a Comment