பிணங்களின் குவியலைத் தாண்டி
கண்ணீரோடு வீட்டுக்கான
பாதையொன்றில் விரைகிறது
சிதைந்தது போக
மீந்து போன ஒற்றைக் கையை
கவ்விக்கொண்டு
அவன் வளர்த்த நாயொன்று
வெளியெங்கும் விரவிக்கிடக்கிறது
கசப்புத்தன்மையும்
வெறுப்புக்களும்
சிந்திய கண்ணீர்த்துளிகளும்
உரைந்த ரத்தமும்
மின்னிக் கொண்டிருக்கின்றன
இரவுகளில்.
கடலில் சேர்க்கிறது
கடலை நம்பி வாழ்த்த
அவர்களின் பாதை.
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
4 months ago
No comments:
Post a Comment