Thursday, April 30, 2009

வேண்டி ....

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

தாய் இருந்தும்
தந்தை இருந்தும்

உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஏதோ வலி சொல்கிறது கவிதை; எனக்கு ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தைக் கண் முன் நிறுத்துகிறது.

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

இந்த கவிதை நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதியது .
உங்கள் கண் முன் நின்றது சரிதான்.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பம் தான்
இந்தக் கவிதையை எழுதவைத்து.
அப்போது யுகமாயினி இதழில் வெளிவந்தது .

மிக்க நன்றி .