அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
தாய் இருந்தும்
தந்தை இருந்தும்
உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .
அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..
பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
3 weeks ago
2 comments:
ஏதோ வலி சொல்கிறது கவிதை; எனக்கு ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தைக் கண் முன் நிறுத்துகிறது.
-ப்ரியமுடன்
சேரல்
இந்த கவிதை நான்கு வருடங்களுக்கு முன்னால் எழுதியது .
உங்கள் கண் முன் நின்றது சரிதான்.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு குடும்பம் தான்
இந்தக் கவிதையை எழுதவைத்து.
அப்போது யுகமாயினி இதழில் வெளிவந்தது .
மிக்க நன்றி .
Post a Comment