Thursday, April 30, 2009

தயக்கம் ..

இறுதிச் சந்திப்பிற்குப்
பின்னும்
உச்சரிக்கப்படாமல்
தங்கிவிட்டன
சில வார்த்தைகள்.

நிராகரிப்புகளைத் தாண்டி
உள்ளத்தின் ஓரிடத்தில்
உறைந்த வார்த்தைகள்
அழுத்திப் பிடித்திருக்கிறது
நம்மிடையேயான தொடர்பை
முடிவற்று நீளும்
காலம் போல..

2 comments:

Ashok D said...

கடைசிவரியை கவனிக்கவும்

பிரவின்ஸ்கா said...

தட்டச்சுப் பிழை. மாற்றிவிட்டேன்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.