Monday, April 27, 2009

ஒத்ததிர்வு...

நாங்கள்
நண்பர்கள் தான்

எங்களின்
திசையும்
வெளியும்
வேகமும்
வேறு வேறானவை.

ஒரே நேர்கோட்டில்
சந்திக்க நேர்ந்த
எங்களின் வார்த்தைகள்
புன்னகையோடு
கைகுலுக்குகின்றன.

அந்த கணம்
உடைந்து விடுகிறது
எங்களிடையே சூழ்ந்திருந்த
மௌனம் .


4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று!

தலைப்பு மிக அருமை.

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி..

மண்குதிரை said...

நல்ல இருக்கு ப்ரவின்ஸ்கா!

பிரவின்ஸ்கா said...

@ மண்குதிரை

மிக்க நன்றி..