அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.
இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி
வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்
பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்
பெரிய சம்பவங்கள் (மீண்டும் தலைப்புச் செய்திகள்- நூல் பார்வை)
-
சன் டிவியில் முதன்மை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் ராஜா வாசுதேவன். அதற்கும்
முன்பே பத்திரிக்கைகளிலும், சன் டி.வி.யுடன் கூடுதலாக சில தொலைக்காட்சிகளிலும...
1 month ago


2 comments:
அருமை நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
Post a Comment