அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.
இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி
வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்
பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்
முட்டாளின் உலகம்
-
முட்டாளாய் ஒருநாள் இருந்து பாருங்கள், சௌகரியங்கள் அதிகம், எதிர்பார்ப்புகள்
குறைவு, நீங்கள் எண்ணம்போல் தவறுகள் செய்யலாம், முட்டாள்களின் உலகம்
முன்னேற்பாடுக...
1 month ago
2 comments:
அருமை நண்பரே!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
Post a Comment