Wednesday, March 18, 2009

சிறுவனின் பரிசு

அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.

இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி

வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்

பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமை நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி

-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா