Saturday, March 7, 2009

குருவிகள் .....

அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...

6 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகு!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி

-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா

saravanan palanisamy said...

Arumai !

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி நண்பா.

இராவணன் said...

அருமை. அருமை .அருமை.
வார்த்தைகள் இல்லை பாராட்ட.

பிரவின்ஸ்கா said...

@ இராவணன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.