Wednesday, March 18, 2009

தனிமையற்றது...

எதையாவது
பாடிக்கொண்டே இருக்கிறது
பியானோ

எதையாவது
வாசித்துக்கொண்டே இருக்கிறது
புத்தக அலமாரி

தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்

எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள்

தனிமைகள் அற்றது
அறை ...

7 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெகு சிரத்தையான சிந்தனை! தொடருங்கள்!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி

-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா

venkatesh said...

ஆமாம் தனிமைகள் அற்றது அறை. அருமை, நல்ல பொருள்.

சுபஸ்ரீ இராகவன் said...

:-).. எதுவும் நிற்பதில்லை... எல்லாம் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது...

மூன்றாவது பத்தியை இப்படி மாற்றலாமா?

தண்ணீர் வடித்து கொண்டே இருக்கிறது
இறுக மூடிய பின்பும்
குளியலறை குழாய்

பிரவின்ஸ்கா said...

@சுபஸ்ரீ இராகவன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இராவணன் said...

//தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்

எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள் // மிக நுண்ணிய பார்வை.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

பிரவின்ஸ்கா said...

@இராவணன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.