Sunday, March 15, 2009

இறகின் இசை ....

அடை மழை நாளொன்றில்
அறைக்கு வந்தது
மின் விசிறியின் மேல் அமர்ந்து
உடல் உலுக்கியது.
மென்காற்றில் மிதந்து
மெதுவாக
அமர்ந்தது
நண்பனின் பியானோ மீது
ஒரு இறகு
பிறகு அறை முழுவதும்
வியாபித்து இருந்தது
இறகின் இசை .....

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமை!

இறகோடு பயணித்து, பியானோவின் ஸ்ருதியில் லயித்துக் கிடந்ததாக ஒரு சுகம்.
உயிரோசையில் படித்துவிட்டே என் கருத்தைச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி

-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா

சுபஸ்ரீ இராகவன் said...

இறகின் இசையில் நனைந்தேன்.
அருமை.

பிரவின்ஸ்கா said...

@சுபஸ்ரீ இராகவன்

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.