எதையாவது
பாடிக்கொண்டே இருக்கிறது
பியானோ
எதையாவது
வாசித்துக்கொண்டே இருக்கிறது
புத்தக அலமாரி
தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்
எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள்
தனிமைகள் அற்றது
அறை ...
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்...
11 hours ago
7 comments:
வெகு சிரத்தையான சிந்தனை! தொடருங்கள்!
-ப்ரியமுடன்
சேரல்
மிக்க நன்றி
-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா
ஆமாம் தனிமைகள் அற்றது அறை. அருமை, நல்ல பொருள்.
:-).. எதுவும் நிற்பதில்லை... எல்லாம் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது...
மூன்றாவது பத்தியை இப்படி மாற்றலாமா?
தண்ணீர் வடித்து கொண்டே இருக்கிறது
இறுக மூடிய பின்பும்
குளியலறை குழாய்
@சுபஸ்ரீ இராகவன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்
எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள் // மிக நுண்ணிய பார்வை.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்
@இராவணன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment