Monday, May 4, 2009

அந்தப் பாய்ச்சலில்...

எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.

எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்


அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது

மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.

5 comments:

மண்குதிரை said...

நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ரசித்தேன்

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

@ மண்குதிரை,சேரல்

மிக்க நன்றி.

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

@அனுஜன்யா
மிக்க நன்றி.