Thursday, May 14, 2009

அன்பிற்கும் உண்டோ...

ஐந்து வினாடிகளே
மீதமிருந்தது.

வாகனங்களுக்கு இடையில்
நெளிந்து ஓடி
தடுப்புச்சுவர் மேல்
கால்வைத்த கணம்
நிலைகுலைந்துவிட்டேன்

அனிச்சையாக
பிடிக்கும் பாவனையில்
கை நீட்டினாள்
காருக்குள் இருந்து .

இன்னமும் தெரியவில்லை
அவளின் நேசத்தில் மிதந்தவன்
காயப்படாமல்
எப்படி சாலையை கடந்தேனென்று .

10 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

படித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. இது போல் நிறைய அனுபவங்கள் எனக்கும் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

oru paiyyan kaiyya neetuna ipdi ezhuveengalade..hm?? :)

-Prem

மண்குதிரை said...

நல்ல உணர்வு பிரவின்ஸ்கா. ரசித்தேன்.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு :)))

ச.முத்துவேல் said...

/படித்தவுடன் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது அனிச்சையாக. /

ஆமாம். எளிமை மற்றும் சிறப்பு.

நந்தாகுமாரன் said...

//

அவளின் நேசத்தில் மிதந்தவன்

//

என்பதை மட்டும் தூக்கி விட்டால் ... கவிதைக்குள் ஒரு ஸ்வாரஸ்யமான thriller-ஐக் கொண்டு வந்திருக்கலாம் ... ஆனாலும் பாதகமில்லை ...

பிரவின்ஸ்கா said...

@சேரல்
அப்படியா ? மிக்க நன்றி.

@prem
மிக்க நன்றி.

@மண்குதிரை
மிக்க நன்றி.

@ஸ்ரீமதி
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

@ ச.முத்துவேல்
மிக்க நன்றி
@ Nundhaa
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

ஆதவா said...

ஹாஹா... சூப்பர்.!!!

பிரவின்ஸ்கா said...

தங்களின் வருகையும், வாழ்த்தும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.

மிக்க நன்றி

இரசிகை said...

gud:)