Monday, May 11, 2009

நித்தியத்துவத்தின் ஒளி

மேஜையின்
விளிம்பில் இருக்கிறது

முக்கோண வடிவிலானது

அதன்
பக்கங்கள் ஒரே அளவில்லானவை.

அறையில்
நிரம்பிய ஒளியை
தன்னுள் அனுமதிக்கிறது

உள்வாங்கி , கிரகித்து
வண்ணம் தருகிறது
அதனதன் குணங்களுக்கேற்ப

அறையின்
சுவர்களிள்
வர்ணஜாலம் காட்டுகிறது

ஒரு கலைப்படைப்பென
தன்னை சிருஷ்டித்துக்கொள்கிறது

பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென.

11 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

நல்லா இருக்கு

அனுஜன்யா

நந்தாகுமாரன் said...

கவிதையின் prism அழகாகத் தான் இருக்கிறது ...

மண்குதிரை said...

நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@சேரல்
மிக்க நன்றி

@அனுஜன்யா
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

@Nundhaa
மிக்க நன்றி

@மண்குதிரை
மிக்க நன்றி

இது என் சங்கப்பலகை said...

அன்பின் பிரவின்ஸ்கா..,
நித்தியத்தின் ஒளி நெஞ்சில் நிறைகிறது.உடம்போடு ஒட்ட தைத்த மிக சரியான அளவு சட்டையை போலவும்,தாராளமாய் வார்த்தைகளை சேர்த்து வைத்திருந்தும் திட்டமிட்டு செலவிடும் தீவிரம் தெரிகிறது..வார்த்தைகளில்.

ச.பிரேம்குமார் said...

அழகாய் இருக்கிறது கவிதை :)

பிரவின்ஸ்கா said...

@ இது என் சங்கப்பலகை
தங்களின் வாழ்த்து மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது .
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

பிரவின்ஸ்கா said...

@ ச.பிரேம்குமார்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

"பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென"

araikkul sirushtikkapatta oli, prabanjam muzhuthum neelvathu eppadi? nithiyamaai viyabippathu eppadi? indha paguthi puriyala :(

-Prem

இரசிகை said...

nalam..