Saturday, April 13, 2013

உண்டல்லவே

தெளிவாக தெரியத்துவங்கியது
கட்டங்கள்

அவர்கள்
விட்டுச்சென்ற அதே
நிலையில்

அருவாளோடு
துடியான சாமிவந்தாடும்
பெரிய வெள்ளை மீசைக்காரருக்கு
பதிலாக நீ

மேய்ப்பர் அற்ற
உனது இரைக்குப் பதிலாக
நான்

உனது பாய்ச்சலில்
சிக்கிக்கொள்ளாத
சாதுர்யமான எனது நகர்தல்
ஆச்சர்யமாய் இருக்கிறது

உயிரின் பிரியம் யாவருக்கும்
உண்டல்லவா?
   
 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதெல்லவோ உண்மை...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.