Friday, March 8, 2013

பிரஞ்னையற்ற பொழுதுகள்

அந்தக் கோடை
மிகவும் மோசமானதாக இருந்தது

எனது
நீரை முற்றிலுமாக உறிஞ்சியது

எனது
உணவுகளை களவாடியது

எனது
ஆடைகளை , கூடாரங்களை எரித்தது

எனது
தலையைப் பற்றி  இழுத்தன
இறப்பின் அருவருப்பான கைகள்

எனது
ஆன்மா உயிர்ப்பின்
பாடலொன்றை முணுமுணுத்தது

எனது
பரிசுத்தமான காதலின்
உயிர்த் துளியை
உன் மீது வீசினேன்

மழை மேகங்களைத் தந்தாய்

எனது
பிரபஞ்சத்தை
நானே 
உருவாக்கினேன்


நான்
மீண்டு வந்தேனா?
அல்லது
காலத்தின் கருணையா?