Thursday, March 21, 2013

குருவிகள் (மீள்பதிவு)


அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

000

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...

நன்றி - உயிரோசை

உல‌க‌ சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு (20-03-2013)
http://en.wikipedia.org/wiki/World_Sparrow_Day

1 comment:

பிரவின்ஸ்கா said...

@ திண்டுக்கல் தனபாலன்

நன்றி