Friday, June 26, 2009

புன்னகை.

புத்தகமொன்றின் பின்னட்டையில்
வார இதழின் பக்கமொன்றில்
எப்பொழுதோ தொலைக்காட்சியில்
பார்த்திருக்கிறேன்

எதிரே வருவது
அவர் தானா ?
தெரியவில்லை

நான் புன்னகைக்க அவரும்
அவர் புன்னகைக்க நானும்
காத்துக்கொண்டிருந்தோம்

கடந்துவிட்டிருந்தோம்
இழப்பின் அதிர்வோடு
புன்னகைக்காமலே .

16 comments:

ச.முத்துவேல் said...

நல்லாயிருக்குது, யதார்த்தமா.

அவர் எப்படி புன்னகைப்பார், நீங்கள் புன்னகைக்காதவரை?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அட....

வித்தியாசமான நிகழ்வு! கணங்களைக் கவிதையாக்குகிறீர்கள் பிரவின்ஸ்கா! அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா said...

முன்பே படித்தேன்.(என் பிண்ணூட்டத்தை எங்கே?)
நகழ்வுகளை அப்படுயே கவிதையாக்கி விட்டீங்க.
மிகவும் நன்று.

"உழவன்" "Uzhavan" said...

நல்லா சொன்னீங்க...
அவரை நமக்குத் தெரியும்.. ஆனால் அவருக்கு நம்மைத் தெரியாதே.. என்ன செய்வது :-))

Venkatesh Kumaravel said...

அட்டகாசம். இதே மாதிரி இன்னைக்கு நடந்துச்சுன்னு சொன்னா நம்புவீங்களா? நாடோடிகள் படம் பார்க்கப்போன திரையரங்குல...
நிதர்சனம்!

த.அகிலன் said...

நல்லம்..

நேசமித்ரன் said...

!அருமைங்க

பிரவின்ஸ்கா said...

@ ச.முத்துவேல்
ஆமாங்க.
மிக்க நன்றி.

@சேரல்
மிக்க நன்றி.

@ஆ.முத்துராமலிங்கம்
உங்கள் முந்தய பிண்ணூட்டம் என் இ- மெயில்க்கும் வரவில்லை .
எனக்கு கரணம் தெரியவில்லை .
மிக்க நன்றி.

@ உழவன் " " Uzhavan "
மிக்க நன்றி.

@Nundhaa
:)
மிக்க நன்றி.

@வெங்கிராஜா
நிச்சயமாக.
மிக்க நன்றி.

@த.அகிலன்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

@நேசமித்ரன்
மிக்க நன்றி.

யாத்ரா said...

அருமை பிரவின்ஸ்கா

பிரவின்ஸ்கா said...

@யாத்ரா
மிக்க நன்றி.

மண்குதிரை said...

nalla irukku nanbaa

Venkatesh Kumaravel said...

என்னை பரிந்துரை செய்து ப்ளாக்ரோல்-லில் இடம் தந்ததற்கு நன்றிகள்!

பிரவின்ஸ்கா said...

@மண்குதிரை
மிக்க நன்றி.

@வெங்கிராஜா
ரொம்ப நல்லா எழுதுறீங்க.
வாழ்த்துக்கள்.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

M.Rishan Shareef said...

இருவரும் புன்னகையை இழக்காமலே :)

நல்ல கவிதை !

இரசிகை said...

gud:)

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா