Monday, April 1, 2013

வேட்கை

மாமிசத்தை கிழித்துண்ணும்
கூர்மையான
இளமஞ்சள் அலகுகள்

சோர்ந்து
ஆனால் மினுமினுக்கும்
கருத்து உருண்ட கண்கள்

மரக்கிளையில் கவ்விநிற்கும்
கூர்நகங்களுடைய
கருத்த கால்கள்

களைப்பின்றி
சமுத்திரம் தாண்டும்
வெள்ளை சிறகுகள்

கூண்டின் மறுமுனையிலிருந்து
என் மீதான பாய்ச்சலொன்றில்
அடர்ந்து அதிர்ந்து
ஒலிக்கின்றன
பறத்தலின் வேட்கை.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயமாத்தான் இருக்கு...!

சுபஸ்ரீ இராகவன் said...

அந்த கூண்ட திறந்து தான் விடுங்களேன் பிரவின்ஸ்கா