Saturday, February 2, 2013

கவிதைகள்

0.
நமக்குப்  பிடித்தமான
ஒரு உயிரினமாக 
உருவெடுத்துக்கொள்ள முடிந்தால் 
எவ்வளவு நன்றாக இருக்கும்
குறிப்பாக 
ஒரு வண்ணத்துப்பூச்சியாக ......

0.

சமீபமாக 
முன்பிருந்ததை விடவும் 
தலைமை என்பதை 
மிகுந்த கசப்பானதாகவே 
உணர்கிறேன்.
எத்தனை குரூரம் 
எத்தனை சூழ்ச்சி 
எத்தனை வன்மை 
எத்தனை சுயநலம் 
எத்தனை பொய்
...........................................
..........................................
...........................................

ஒரு  வண்ணத்துப்பூச்சிக்கு  கூட 
துப்பாக்கியை கையாள 
கற்றுக்கொடுப்பார்கள்  போலும் .



நன்றி - உயிரோசை


  




3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிலைமை அப்படி இருக்கு...!

அவள் said...

இந்த கால கட்டத்தில் வண்ணத்துப் பூச்சீ,
அதனை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் போல ...

சுபஸ்ரீ இராகவன் said...

நமக்குப் பிடித்தமான

ஒரு உயிரினமாக

உருவெடுத்துக்கொள்ள முடிந்தால்

எவ்வளவு நன்றாக இருக்கும்

குறிப்பாக

ஒரு வண்ணத்துப்பூச்சியாக ......

//Azhagu!!//