Saturday, July 11, 2009

இடைவெளி

அடர்ந்து வளர்ந்திருக்கின்றன
மரங்களும் செடி கொடிகளும்
புல்வெளியெங்கும் பனித்துளி
சலனமற்றிருக்கிறது நீர்நிலை
பூக்களின் வாசம்
நிரம்பியிருக்கிறது காற்றில்
பெயர் தெரியாத பறவைகளின்
ஓசை இசையென
வியாபித்திருக்கிறது
இங்கு
முழு சுதந்திரம்
அளிக்கப்பட்டிருக்கிறது
மனமெங்கும் மகிழ்ச்சி

அடரிருளில்
காதைக் கிழிக்கும் இரைச்சலில்
இரண்டடி இடைவெளியில்
பாய்கிறது
எக்ஸ்பிரஸ் இரயில்

இரைச்சலில் சொல்லிக்கொண்டேன்
இடைவெளி
இல்லமலிருந்திருக்கலாமென்று.

18 comments:

நந்தாகுமாரன் said...

இசையும் இரைச்சலும் இடைவெளியும் பதிவும் அருமை

ச.முத்துவேல் said...

மனக்கண்முன்னே காட்சிகளை அழகாக விவரிக்கிறது வரிகள்.

நேசமித்ரன் said...

அருமை
ஷெனாய் இசையின் ஈற்று போல துவங்கும்
கவிதை கைப்பிடித்து அழைத்து செல்லும் வெளி
அதற்கொரு கவிதை எழுத வேண்டும் ..! :)
அற்புதம் !

Unknown said...

கவிதை அற்புதம் !

பிரவின்ஸ்கா said...

@Nundhaa
மிக்க நன்றி


@ ச.முத்துவேல்
மிக்க நன்றி

@நேசமித்ரன்
மிக்க நன்றி

@gokul
மிக்க நன்றி

Venkatesh Kumaravel said...

ஒருவித அலைச்சலும் எரிச்சலும் வரிகளிலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று!

இதற்கு முந்தைய கவிதைக்கு என் கருத்து - நீங்களுமா?

-ப்ரியமுடன்
சேரல்

ny said...

தொடங்கும் வரிகளிலிருந்தே
தேடத் தொடங்கினேன்... இறுதியில் என்ன ஒளித்து வைத்திருப்பீர்களென்று..

marvellous finish!!

பிரவின்ஸ்கா said...

@வெங்கிராஜா
மிக்க நன்றி

@சேரல்
மிக்க நன்றி


@ kartin
மிக்க நன்றி

Ashok D said...

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு பிரவின்ஸ்கா.

பிரவின்ஸ்கா said...

@ D.R.Ashok
:)

மிக்க நன்றி
@ஜ்யோவ்ராம் சுந்தர்
மிக்க நன்றி

இராவணன் said...

நல்ல கவிதை பிரவிண்ஸ்கா

பிரவின்ஸ்கா said...

@இராவணன்
மிக்க நன்றி

M.Rishan Shareef said...

மனம் முழுதும் மகிழ்ச்சி வியாபித்திருக்கும் கணமொன்றில் அப்படியே இறந்துவிடும் விருப்பு தோன்றுமெனக்கும். கவிதையும் அதையே சொல்கிறதென எண்ணுகிறேன்.
நல்ல கவிதை !

பிரவின்ஸ்கா said...

@ எம்.ரிஷான் ஷெரீப்
ஆமாங்க
மிக்க நன்றி.

நளன் said...

:) so nice.

anujanya said...

சாரி, பிரவின்ஸ்கா

லேட்டா வரேன். நல்லா இருக்கு. ஏன் தற்கொலைப் பற்றிய கவிதைகள் அதிகமா இருக்கு?

அனுஜன்யா