சபானா உட்கார்ந்து கொள்ள
போதுமான இடம் இருக்கிறது
அந்தச் சக்கர நாற்காலியில் .
சோர்வில்லாமல்
அவளுக்கு
பூங்கா முழுவதும்
சுற்றிக் காட்ட முடிகிறது .
கடைவீதிகளில்
அவளுக்கு விருப்பமான
உடைகளையோ , பொருட்களையோ
வாங்கித்தர முடிகிறது .
சாபானவை கடற்கரைக்கு
அழைத்துச் செல்வதை மட்டும்
தவிர்த்து விடுகிறார்
வழி முழுவதும்
மனிதர்களின் காலடிச் சுவடுகள்
கிடக்குமென்பதால் .
நன்றி - உயிரோசை
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
-
இந்தியாவின் உயர்ந்த இலக்கிய மரியாதையாகக் கருதப்படும் ஞானபீட விருது பற்றி
அனைவரும் பேசும்போது ஒரு வேதனையான கேள்வி தொடர்ந்து எழுகிறது. ஏன் தமிழ் பெண்
எழுத்...
13 hours ago

