தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்
கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்
கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்
இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.
கணபதி வழிபாடும் வரலாறும்
-
பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம்
செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து
வரும் வழக்கம்....
33 minutes ago